top of page

குமாரோடு முதல் முறை - திவ்யாவின் கதை 2

  • Writer: Nanda Kumar
    Nanda Kumar
  • Dec 14, 2023
  • 5 min read

வணக்கம் நண்பர்களே இது இந்த தளத்தில் வந்த பக்கத்து வீட்டு அண்ணாவின் கதையின் ஒரு பகுதி, திவ்யா எப்படி குமாரோடு முதல் முறை செய்தாள் என்பதை பற்றி அவள் சொல்ல, அதை கதையின் வடிவில்.


இது வரை..


திருமணம் ஆகி சரியான சுகத்தையும் அனுபவிக்காமல், குழந்தை இல்லாதவள் என்கிற பெயரோடு நான் அல்லல் பட்டேன். வேறு யாரிடமும் பேச முடியாத சூழல், சந்தேக புத்தி கொண்ட கணவன், எதிர் வீட்டில் வயசான மாமா மாமியோடு பேசினாள் கூட என்னை வறுத்து எடுத்துவிடுவார். இங்கே எனக்கு யாரையும் தெரியாது, பேசியதும் இல்லை. 


என் மாமியார் எனக்கு குழந்தை இல்லை என்பதை குத்தி காட்டி பேச, நான் அழுதுகொண்டே தனிமையில் பூங்காவில் இருந்தேன்…


இனி…


குழந்தை இல்லை என்கிற வலியோடு, எதுவும் சரியாக அனுபவிக்காமல் நரகத்தில் வாழும் பெண்களுக்கு தான் என் வலி புரியும்..


தனியாக யாருடனும் பேச கூட சுகந்திரம் இல்லாமல், கணவரின் பாசமும் இல்லாமல் இருப்பதை எண்ணி வருந்தினேன். எப்படியும் நாட்கள் போக போக அவர் மாறி விடுவார் என்று என் அம்மா சமாதானம் சொன்னாலும், அவர் மாறுவதற்கான அறிகுறி இல்லை.


அவள் தங்கையே இவன் யாரிடமும் பேச மாட்டான், பணம் தான் அவன் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் என்று என் தங்கையிடம் கூறியதாக என்னிடம் சொன்னாள். அவள் தங்கையிடமே அதிகம் பேசாமல், அவளின் திருமணத்தை நடத்தி சீக்கிரம் அனுப்பிவிட வேண்டும் என்று வேகமாக அதற்கான வேலையை பார்க்கிறார். அவளுக்கு என்னை விட 1.5 கம்மி, என் தங்கை தோழி அவள்.


அவர் அம்மா வேறு இப்போது திடீரென்று குழந்தை இல்லை என்று என்னை குத்தி காட்டி பேசி, “இப்போது பொண்ணு பாக்குறப்போ பொண்ணு நல்ல குடும்பம், நல்ல சொத்து இருக்கான்னு மட்டும் பாக்க கூடாது, அவ குழந்தை பெத்துக்க தகுதியானவளா என்று பாக்கணும் போல” என்று அவள் நேரடியாக என்னை கேட்க எனக்கு அழுகை வந்து போனை வைத்துவிட்டு வீட்டை விட்டு நடந்து வெளியே வந்தேன். எங்கே போகிறேன் என்று தெரியாமல் நடக்க, நான் சென்று அமர்ந்த இடம் பூங்கா.


எவ்ளோ நேரம் அழுது இங்கே இருக்கிறேன் என்று தெரியாது, அப்போது ஹலோ என்று யாரோ என்னை அழைக்க, நான் திரும்பி பார்த்தேன்.


அங்கே ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள், பார்க்க அழகாக கலையாய் இருந்தாள். 


நான் கண்களை துடைத்து கொண்டு எழுந்து நின்றேன், அவள் அதை பார்த்து முகம் மாறியது. 


“நீங்க (என் வீட்டின் நம்பரை கூறி) இருக்கும் கார்த்திக் சார் மனைவி தானே?”


நான் ஆமாம் என்று தலையை ஆட்டினேன்.


“நான் மது, கார்த்திக் கூட வேலை செய்யிறேன், இங்கே தான் நானும் தங்கியிருக்கேன், அவர் என்ன அனுப்பி வச்சாரு உங்க கிட்ட பேசணுமாம், நான் வீட்டுக்கு போய் பாத்தேன், வீடு பூட்டி இருந்துச்சி, எதிர் வீட்டு மாமி நீங்க இங்க இருக்குறதா சொன்னாங்க, அதான் வந்தேன்.”


“அவர் ராத்திரி வர மாட்டாராம், அவர் துணியை எடுத்துக்கிட்டு வர சொன்னார், உங்க மொபைல் ரீச் ஆகல, அதனால தான் என்னை அனுப்பினார், (அப்போது அவள் போன் அடிக்க, அவள் எடுத்து பேசி) உங்க கணவர் பேசணுமாம்” என்று போனை என்னிடம் கொடுத்தால்.


என்னிடம் சாதாரணமாக பேசினார், இன்று இரவு வேலை இருப்பதால் அவர் துணி இருக்கும் அலமாரியில் இருந்து ஒரு செட் துணி எடுத்து இவளிடம் கொடுத்து அனுப்புமாறு சொல்ல, நான் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். வழி தெரியாமல் சுற்றிய என்னை அவள் சிரித்த படி சரியான வழியில் கூப்பிட்டு சென்றாள்.


சிறிது நேரம் அமைதியாக வந்தவள் “சார் வீட்லையும் கோவ படுவாரா?”


நான் ஆமாம் என்று தலையை ஆட்டினேன், அப்போது நாங்கள் லிப்ட்டில் ஏறினோம், என்னை மீறி கண்ணில் நீர் வழிந்தது. அவள் என் கையினை இருக்க பிடித்து, கண்ணீரை துடைத்தாள். என்னை மீறி அவள் மீது சாய்ந்தேன்.


எங்கள் தளம் வர, பிரிந்தோம். நான் சென்று கதவை திறக்க, அவள் உள்ளே வந்தாள், அப்போது என் போன் அடித்தது. நான் சென்று எடுக்க என் கணவர் தான், போன் ரொம்ப நேரம் எடுக்கவில்லை என்று கத்தினார். நான் பதில் கூற முடியாமல் தவித்தேன். மது எப்போது பின்னால் வந்து நின்றாள் என்று தெரியவில்லை, ஆனால் அவர் பேசியது அவ்ளோ சத்தமாக வெளியே கேட்டது. 


எங்கிருந்து பேசுகிறார் என்று தெரியவில்லை. எனக்கு அழுகையாக இருந்தது, அவர் திட்டி முடிக்கும் வரை நான் காத்திருந்தேன். பின் போனை கீழே வைக்க, அவள் என் தோள்களை பற்றினாள். நான் என்னை மீறி அழுதுகொண்டே அவளை அணைத்தேன்.


அவள் என்னை நன்றாக இறுக்கி அணைக்க, நானும் அணைத்துக்கொண்டு அழுதேன். அவள் சிறிது சமாதானம் சொல்ல, நான் அவளை விட்டு பிரிந்து சென்று துணிகளை எடுத்து ஒரு பையில் வைத்தேன், அவரின் பிரஷ் சோப்பு மற்றும் அவர் கூறிய பொருட்களை எடுத்து வைக்க, அவள் போன் பேசிக்கொண்டு இருந்தாள்.


நான் அவளிடம் கொடுக்க, அவள் என்னை அணைத்து கொண்டு எல்லாம் மாறும் கவலை படாதே என்று என் நெற்றியில் முத்தம் படித்தாள். இந்த அணைப்புக்கு தானே என் மனம் ஏங்கியது, அவள் அவ்வாறு செய்ததும் நான் அப்படியே உருகி போனேன்.


அவள் என்னை அணைத்தபடி இருக்க, வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு பிரிந்தோம். அவள் தோழி வந்திருந்தாள், இவள் என்னிடம் இன்னொரு நாள் வருவதாக கூறி என்னுடைய போன் எண்ணெய் வாங்கிக்கொண்டு கிளம்பினாள். 


நான் அவள் கொடுத்த அணைப்பை மனதில் நினைத்தபடி, உள்ளே சென்றேன், ஏனோ அவர் திட்டியதோ என் மாமியார் குழந்தை இல்லை என்று பேசியதோ அப்போது எனக்கு பெரியதாக தெரியவில்லை.


மதுவை எண்ணிக்கொண்டே நான் வீட்டை துடைத்து பின் சிறிது நேரம் படுத்து தூங்கினேன், எப்படியும் இன்று இரவு அவர் வர போவது இல்லை என்று நிச்சயம் ஆனது. 


மாலை அம்மா அழைக்க, அவள் பேச்சில் கொஞ்சம் வருத்தம், பின் நான் கேட்க, என் மாமியார் அம்மாவை அழைத்து, என்னை டாக்டரிடம் கூப்பிட்டு போகும் படி கூறியதாக சொல்லி வருத்தப்பட்டாள்.


பின் அவள் இந்த வாரம் வருவதாக என்னிடம் கூறினாள், நான் சரி என்று விட்டு போன் வைக்க, வீட்டின் அழைப்புமணி அடித்தது. நான் சென்று அதில் இருந்த ஓட்டை வழியாக பார்க்க, மது நின்றிருந்தாள்.


நான் கதவை திறக்க, அவள் சிரித்துக்கொண்டே வந்தாள். அவள் கையில் ஒரு பை. 


“ஹாய் நான் சாப்பிட்டு ஆபீஸ் போக போறேன், தனியாக இருக்க போர் அடிச்சிடு அதான் உன் கூட சாப்பிட வந்தேன்” என்றாள்.


நான் சந்தோசமாக கதவை திறந்து விட்டேன். அவள் உள்ளே வந்ததும் கதவை மூடினேன். அவள் கையில் கொஞ்சம் நொறுக்கு மற்றும் ஜூஸ் இருந்தது.


நான் கிட்சேன் சென்று சமைக்க ஆரம்பிதேன். “ஹேய் நான் என்ன உன் புருஷனா, வந்ததும் சமைக்க ஆரம்பிச்சிட்டா? வா பேசிட்டு அப்புறம் சாப்பிட போவோம்” என்று என்னை இழுத்தாள்.


“உன்ன மாதிரி புருஷன் கெடச்ச நல்ல இருக்கும்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு வெளியே சென்றேன்.


என் முகம் வாடி இருந்ததை பார்த்து, என்ன வென்று கேட்டாள். நான் முதலில் அமைதியாக இருந்தேன், அவள் என்னை கையில் பிடித்து அவள் அருகில் அமரவைத்து கேட்க, என்னை மீறி நான் அழுதேன். 


அழுதபடி இன்றும் கடந்த ஆறு மாதமாய் இவர் என்னிடம் எப்படி நடக்கிறார் என்று கூற, அவள் பொறுமையாக அனைத்தையும் கேட்டாள். அவள் என் அருகில் அமர்ந்து என் தலையை கோதிவிட்டு கொண்டு கையை பிடித்து ஆறுதலாக சில வார்த்தைகள் பேசினாள்.


அவர் என்னோடு பேசுவது இல்லை, என்று நான் சொல்ல, அவள் ஆமாம் எப்பவும் ஆபீஸ்ல அப்படி தான் இருப்பாரு. என்று அவர் ஆஃபிஸில் எப்படி இருப்பர் என்று இவள் சொல்ல, எதுவும் பெரிய மாற்றம் இல்லை. வீட்டில் மனைவி என்று உரிமையில் திட்டுகிறார், அங்கே அவர்களை விட பெரிய அதிகாரி.


நான் அவள் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதேன், “இந்த வாரம் டாக்டர் கிட்ட போகும்போது அவரையும் அவரின் அம்மாவையும் கூப்பிட்டு போ” என்றாள்.


நான் எதற்கு என்று கேட்டதற்கு,


அவள் - “யாருக்கு பிரச்னை என்று கண்டிப்பா தெரிஞ்சிடும்” அவ சொன்ன. நான் யோசித்தேன், அவள் என்னை எப்படியே வற்புறுத்தி அம்மாவிடம் பேச வைத்தாள். நான் அம்மாவிடம் சொல்ல அவள் என் மாமியாரிடம் பேசினாள், அவள் வருவதா கூறி முடித்தார்கள்.


உள்ளுக்குள் எனக்கு பயம், உண்மையில் எனக்கு எதுவும் பிரச்னை என்றாள்? அடுத்து என் தங்கை திருமணமும் பாதிக்கும். இப்படி பலவாறு யோசிக்க, அதை அவளிடம் கூற.


அவள் என்னை இறுக்கி அணைத்துக்கொண்டாள். அவளின் அணைப்பு எனக்கு ஆறுதலாக இருந்தது, பின் இருவரும் உள்ளே சென்று சமைத்து சாப்பிட்டோம். 


அதன் பிறகு 3 நாட்கள் அவள் தினமும் என்னோடு சாப்பிடுவாள், அல்லது நான் அவள் அறைக்கு செல்வேன். ஒன்றாக சாப்பிட்டோம், அவள் மூலமாக என் கணவர் எப்போது வருவார் போவார் என்று தெரிந்துகொண்டேன்.


அந்த வார இறுதியில் அம்மாவும் என் தங்கை இருவரும், மாமியார் மாமனார் ஆகியோர் வந்தார்கள். அவர்கள் என்னை மருத்துவ சோதனைக்கு அழைத்து சென்றார்கள், அவர்கள் சில சோதனைகள் கூறி அதை எடுத்து வருமாறு சொல்ல, நாங்கள் எடுத்தோம். என் உடல் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக கூறியதால், அடுத்து 3 மாதம் சாப்பிட வேண்டிய உணவு, மாத்திரை, உறவு கொள்ளும் நேரம் அனைத்தையும் கூறினார்கள். 


என் வீட்டில் இருப்பவர்கள் தான் வந்தார்கள், என் கணவர் வரவில்லை. வீட்டில் இருப்பவர்கள் அவரிடம் கூறுமாறு சொல்ல, நான் எங்கே அவரிடம் பேச என்று நொந்துகொண்டேன்.


அதன் பிறகும் நான் கற்பமாகவில்லை, மூன்று மாதம் கழித்து அவரும் வந்தார், அவரிடம் டாக்டர் சொல்ல நல்ல மண்டையை ஆட்டினார். ஆனால் அவர் இஷ்டம் போல தான் இருந்தார். இப்படியே மாதங்கள் செல்ல அவள் தங்கைக்கு திருமணம் ஆனது.


அவள் கணவரோடு ஒத்துப்போக வில்லை என்று அவள் 3 மாதத்தில் வீட்டிற்கு வந்தாள், பின் வீட்டில் இருப்பவர்கள் பேசி அவளை திரும்ப அனுப்பி வைத்தார்கள்.


எனக்கும் மதுவிற்கும் இடையே ஒரு புது நட்பு உருவாகியது. அவள் என் கணவரோடு வேலை செய்கிறாள் என்பதால் என் கணவர் அவளோடு கடைக்கு செல்வதோ, அல்லது வெளியே அவள் அறைக்கு செல்வதற்கும் எதுவும் சொல்லவில்லை. 


அவள் எல்லா விஷயமும் தெரிந்தவள், ஆனால் ஆண்களை கண்டால் பிடிக்காது என்று அவள் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை என்னிடம் பகிர்ந்தாள், நானும் அவளிடம் என் கட்டிலறை ரகசியங்களை பகிர்ந்தேன். அதை கேட்டு அவள் அதிர்ச்சியானால், “என்னடி எடுத்ததும் மெயின் ஆட்டம்னா சீனா விளையாட்டு இல்ல வேற ஆட்டம் எதுவும் நடக்காத? இல்ல வெளியே வச்சி கொஞ்சுறது, கிள்றது அது போல?” என்று கேட்டாள்.


எனக்கு சிரிப்பாக வந்தது, எதுவும் இல்லை என்று தலையை ஆட்டினேன். அவள் எப்போதும் செய்வது போல என் தலையை பிடித்து என் நெற்றியில் முத்தமிட்டு நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். 


அவள் என் தலையில் முத்தமிட்டு கொண்டே இருக்க, நான் என்னை மறந்து அவளின் நெஞ்சில் (அன்று ஒரு கருநிற சுடிதார் அணிந்து வந்திருந்தாள், அதில் அவள் நெஞ்சு நன்றாக தெரிந்தது, அவ்ளோ லோ கட்) அது வேர்வையால் ஈரமாக இருந்தது. நான் திரும்ப முத்தம் கொடுக்க, அவள் என்னை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டாள், நான் அந்த அணைப்பில் கிரங்கிபோனேன். 


“திவ்யா…” அவள் காமமாய் அழைக்க, நான் தலையை நிமிர்ந்து அவளை பார்த்தேன், அவள் என்னை குனிந்து பார்த்தால், அவள் உதடு துடிக்க, என் உதடு பிரிந்தது, அவள் சற்று முன்னோக்கி வர, நான் என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பில் கண்களை மூடினேன். 


அவளின் மூச்சு என் முகத்தில் பட்டது, இப்போது என் வாயினில், நான் உடல் நடுங்க அவளை அணைத்து இருக்க, அவள் உதடு என் உதட்டின் மீது…


தொடரும்….


Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2035 by Parenting Blog

Powered and secured by Wix

Inga thaan namma ooru thaan

Tel: ethuku?

bottom of page