First Time 7
- Nanda Kumar
- Dec 22, 2023
- 6 min read

முதல் முறை 7
முதல் முதலில் நாம் செய்யும் அல்லது அடையும் எந்த வித சந்தோசம் துக்கம் நம்மை பெரிதும் பாதிக்கும், மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். சில நினைவுகள், சில வலிகள், சந்தோசம், துக்கம். இது எல்லார் வாழ்க்கையிலும் உண்டு. என் அப்பா முதல் முறை வண்டி வாங்கிவந்து அதில் என்னை ஏற்றிக்கொண்டு சுற்றிய தருணம், என்னை கடைக்கு அழைத்துச்சென்று முதல் மிதிவண்டியை வாங்கி தந்த நினைவுகள்.
சித்தி எனக்கு வண்டி ஓட்ட கற்று தந்தது, நீச்சல் அடிக்க கடலுக்கு சென்று முழுகிய என்னை தூக்கிவிட்டது.
இது போல எல்லாருக்கும் ஒரு சிறு சிறு தருணங்கள் மறவாமல் இருக்கும்.
என் வாழ்க்கையில் அப்படி ஒருத்தி தான் ஸ்வாதி, வெறும் காமம் பற்றி மட்டும் எழுதிய இங்கே எங்களுக்குள் இருந்த நட்பு பாசம் அதை தாண்டி வந்த காதலை பற்றி முழுமையாக எழுத இயலவில்லை.
என்னதான் நான் அதன் பிறகு பல பெண்களோடு இருந்தாலும் எப்போதும் ஸ்வாதியின் வாசனை என் உடலில் மணக்கும் அவளை சந்தித்து வந்த பிறகு. எப்போது அவளை சீண்டிவிட்டு வீட்டிற்கு வந்தாலும் அந்த ஒரு வாசனை எனக்கு அந்நாள் முழுவதும் ஒரு கிளர்ச்சியை தரும். அதன் பிறகு சந்தித்த பெண்களிடம் நான் அது போல அனுபவித்தது மிக குறைவு, என் மனைவியை தவிர்த்து.
கதைக்கு…
அந்த செமெஸ்டரில் நாங்கள் கட்டாயமாக ஏதாவது நிறுவனத்தில் 6 மாதம் வேலை செய்யவேண்டும், அப்போது தான் ஸ்வாதிக்கு திருமணம் நிச்சயம் ஆகி, இரண்டு மாதத்தில் திருமணம் ஆனது. அவள் நான் வேலை செய்த நிறுவனத்தில் ட்ரைனிங் கிடைக்காததால் வேறு ஒரு நிறுவனத்தில் இருந்தாள்.
ப்ரியாவும் ஸ்வர்ணாவும் பெங்களூரில் சென்றுவிட்டார்கள்.
நாங்கள் ட்ரைனிங் சேர்ந்த 4 மாதத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. கனத்த இதயத்துடன் மிகுந்த வலியில் நான் இருந்தேன். என் நண்பன் புரிந்துகொண்டு எனக்கு அந்த வீட்டை குடுத்தான்.
6 மாதங்கள் வரை நான் யாரிடமும் பேசவில்லை, தனிமையிலே இருந்தேன், வேலைக்கு போவது, பின் வீட்டிற்கு வருவது, 6 மாத ட்ரைனிங் முடியும் போது நான் என் சித்தி ஊரில் போய் அங்கிருந்து சுற்றி இருந்த ஊர்களில் சென்று ரோட்டில் தங்குவது கிடைத்ததை சாப்பிடுவது என்று இருந்தேன்.
எல்லாம் வெகு வேகமாக நடந்தது. அவர்கள் கேட்டதும் நானும் ஸ்வாதியும் சென்று அவர்கள் பெற்றோரோடு பேசினோம், அதிர்ச்சியான அவர்கள். பின் அவர்கள் அக்காவை காரணம் காட்டியும், அவர்களின் வயது, குடும்ப நிலையை காரணம் காட்டி பேச, எங்களால் பதில் பேச முடியவில்லை.
ட்ரைனிங் முடிந்து இன்னும் ஒரு வருடம் கல்லூரி இருக்கிறது எனக்கு, என் அண்ணா திருமணம், கல்லூரி முடிந்து வேளைக்கு சென்றாள் மட்டுமே எதுவும் கேட்கும் நிலை. அவளை வீட்டை விட்டு வர சொல்லவும் எனக்கு மனதில்லை, என்ன இருந்தாலும் அவர்கள் அம்மா கையில் நான் சாப்பிட்டிருக்கிறேன், என்னை நம்பி வீட்டிற்கு அனுப்பினார்கள், எல்லாம் செய்தார்கள். அவர்களின் நம்பிக்கையை உடைக்கக்கூடாது என்று எண்ணியதால் நானும் ஸ்வாதியும் பேசி பிரிந்தோம்.
இனி பார்க்கவே முடியாது என்று தெரிந்து அந்த கடைசி நாள் இருவரும் வெகு நேரம் பீச்சில் பேசாமல் கையை பிடித்தபடி கடலின் அலையில் கால் நனைந்தபடி நின்றிருந்தோம். பேச வார்த்தைகள் இல்லை, அழுது அவளை நான் மேலும் வருத்தப்பட வைக்க விரும்பவில்லை. அவள் கண்ணீருக்கு பதில் சொல்லவும் தெரியாமல் நின்றோம், பிரிந்தோம்…..
கடைசி வருடம் அவள் கல்லூரிக்கு வரவில்லை, எனக்கு ஸ்வர்ணாவும் ப்ரியாவும் முழு நேரம் கூடவே இருந்து என்னோடு பேசினார்கள் பழகினார்கள். அவர்களின் காதலில் நான் குறுக்கே போய்விடக்கூடாது என்று நான் சற்று விலகினாலும் அவர்கள் என்னை விடுவதாக தெரியவில்லை.
கல்லூரி முடிந்து நான் சில மாதம் வெளியூர் சென்று இருந்தேன், புது ஊர் எனக்கு புதுசாக பல விஷயங்களை கற்று தந்தது, காதலை தாண்டி வெளியே இருக்கும் உறவுகள், நட்புகள் பற்றியும் தெரிய, நான் திரும்ப சென்னைக்கு வந்தேன். என் நண்பன் வேலை செய்த நிறுவனத்தில் நான் வேலைக்கு சேர்ந்தேன்.
----------------------------
அந்த நிறுவனத்தை இரண்டு பேர் நடத்துகிறார்கள், கணவன் மனைவி, கணவர் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி, அவர் கை வைக்காத பெண்களே இல்லையாம் அந்த பழைய நிறுவனத்தில், அதற்காக அவரை அடக்கவே அவர் மனைவி மற்றுமோர் அறையில் இருப்பதாக நண்பன் கூறினான். எப்போதும் ஒரு மரணஅமைதி இருக்கும் அங்கே.
ஒரு சின்ன பேச்சு சத்தம் கூட கேட்காது, நான் சேர்ந்த முதல் நாள் என்னை ஒரு நபரின் அருகே அமர சொன்னார்கள். நான் அமர்ந்து அவர்கள் செய்த பழைய வேலைகளை நான் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
அப்போது எனக்கு பின்னே இருப்பவர்கள் முதலாளி இல்லை என்று சாதாரணமாக பேசிக்கொண்டு இருக்கும்போது தடார் என்று கதவு திறந்தது, உள்ளே நுழைந்த ஒரு பெண்மணி நுனிநாக்கு ஆங்கிலத்தில் “வாட் தி பாக் கோயிங் இயர்” என்று கத்த அங்கே ஒரு நிசப்தம். அவள் நேராக அவள் அறைக்குள் சென்றாள்.
அப்போது என் சீனியர் வந்து என்னை அழைத்து சார் அறைக்கு அழைத்துப்போக அங்கே அவள் இருந்தாள், என்னிடம் பேசினார்கள், பின் ஆர்த்தியை அழைத்தார்கள்.
ஆர்த்தி, ஒரு சூப்பர் பிகர், 5 அடி உயரம், ஒல்லியான உடம்பு ஆனால் அங்கங்கள் எல்லாம் பெரியதாக, அவள் மார்பு நல்ல தள்ளியபடி நிற்க, எதிரே வந்து நின்றாள்.
‘இவனுக்கு ஆரம்ப ட்ரைனிங் குடு, சீக்கிரம் கத்துக்கணும் அவன்” என்று சார் சொன்னார். என்னை வெளியே இருக்க சொன்னார்கள்.
நான் வெளியே சென்றதும் அவர்கள் பேசிவிட்டு வந்தார்கள். என் சீனியர் என்னை அழைத்து, “இது ஒரு வாரம் ட்ரைனிங் இது மூலமாக இங்கே எப்படி வேலை செய்கிறோம் என்று உனக்கு புரிந்துவிடும், அதே போல எல்லார் செய்வதை போன்று ஸ்டாண்டர்ட் எல்லாம் சொல்லி தருவார்கள், எல்லாரும் சுலபமா ஒரு வாரத்துல கத்துப்பாங்க நீ எப்படினு தெரியல, எனக்கு வேலை இருப்பதால் அவள் உனக்கு சொல்லி தருவ, ம்ம்ம்ம், போ போ” என்று அவன் விடும் பெருமூச்சியில் ஒரு பெரிய வயித்தெரிச்சலை என்னால் உணர முடிந்தது.
நான் திரும்பி என் இடத்திற்கு போக ஆர்த்தி வெளியே வந்தாள், நல்ல அழகாக இடுப்பை அசைத்து அசைத்து நடந்து என்னிடம் ஹாய் சொல்லிவிட்டு அவள் இடத்திற்கு சென்றாள். நான் சென்று என் இடத்தில் அமர, கையில் ஒரு நோட் மற்றும் சாவியை எடுத்துக்கொண்டு வந்து “வாங்க போகலாம்” என்றாள்.
நான் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு அவள் பின்னால் சென்றேன்.
ஒரு படிக்கும் அறைபோல ஒன்று இருந்தது, அதில் ஒரே நேரத்தில் 5 பேர் அமரலாம், இரண்டு கணினி மற்றும் ஒரு பெரிய திரை. மற்றும் அங்கே இருந்த அலமாரி முழுவதும் புத்தகங்கள். “இது தான் லைப்ரரி, மற்றும் படிக்கும் அறை, அப்போப்போ யாராவது ஒரு செமினார் போல எடுக்கணும் இல்லை மற்றவர்களுக்கு கற்று தரணும்” என்று அவள் அந்த அறையில் இருந்த ஏசியை ஆன் செய்தாள், கதவை மூடிவிட்டு அவள் கணினியை ஆன் செய்து, “நான் ஆர்த்தி, இங்கே 8 வருடமாக இருக்கேன், எப்பவும் ‘ஒரு ஆள்’ பெயரை சொல்லி அவர் தான் இந்த ட்ரைனிங் தருவார் அவர் இப்போ இல்லை இன்னொருத்தர் வேலை இருக்குனு சொன்னதால எனக்கு இந்த வாய்ப்பு” என்று சொல்லிக்கொண்டே அமர்ந்தாள்.
அவள் ஒரு மஞ்ச நிற சுடிதார் அணிந்திருந்தாள், அமர்ந்து என்னை பற்றி சாதாரண விஷயங்களை கேட்டு சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள். இருவரும் பேசிக்கொண்டு இருக்கையில் மேடம் வந்து “என்ன வகுப்பு நடக்கிறதா, எத்தனை நாள் ஆகும்” என்று அவள் கேள்விமேல் கேள்விகேட்டு பின் “நான் வெளியே போகிறேன், மாலை வந்து என்னை பார்த்துவிட்டு போ” என்று சொல்லிவிட்டு போனார்கள்.
அவள் சொல்லிக்கொடுத்து கொண்டு இருக்கையில், ஒரு ஆள் வந்து “மேடம் சார் போயாச்சு” என்று சொல்லிவிட்டு கதவை மூடிவிட்டு போனான்.
“அப்பாடா..” என்று அவள் பின்னே சாய்ந்து கொஞ்சம் சாதாரணமாக அமர்ந்தாள்.
“என்ன மேடம் போனதும் இவ்ளோ ரிலாக்ஸ் ஆயிட்டீங்க?”
“ஆமாம் இங்கே கேமரா இருக்கு (அவள் கையை காட்டினாள்) அது மூலமாக மேடம் பாப்பாங்க, அதனால கொஞ்சம் பார்த்து இரு, இதுல பதிவு ஆகாது ஆனா உள்ளே இருக்கும்போது அவங்களால பாக்க முடியும்” என்று என்னோடு கதை பேசினாள். இருவரும் பேசிக்கொண்டே அவள் சொல்லிக்கொடுத்ததை கவனித்தோன்.
அவள் கற்று தருவது எனக்கு ஏற்கனவே நன்றாக தெரிந்த விஷயங்கள் என்பதால் எனக்கு சுலபமாக புரிந்தது, அதனால் அன்றைய பாடங்களை நாங்கள் மதியத்திற்குள் முடித்தோம்.
“ஆரம்ப பாடங்கள் கொஞ்சம் சுலபமா இருக்கும் அதுக்கு அடுத்து வருவது கொஞ்சம் நன்றாக கவனிக்கணும், கணினியில் பழுது என்கிற வார்த்தையை எப்போதும் சார் எதிரில் கணினி வேலைசெய்யவில்லை என்று சொல்லி விடாதே, ஒரு அளவிற்கு என்ன பிரச்னைக்கு என்ன செய்யவேண்டும் என்று நான் கற்று தரேன், அதற்கு மேல் இன்னொருவர் வருவார் அவர் கற்று தருவார்” என்றாள்.
நாங்கள் சாப்பிட சென்றோம், சாப்பிட்டு மறுபடியும் அமரும் போது, நான் என் வேலையை சுலபமாக்க எனக்கு தகுர்ந்தாற்போல சில மாற்றங்களை எனக்கு கொடுத்த கணினியில் செய்ய அவள் அதை பார்த்து கொண்டிருந்தாள்.
மறுபடியும் நாங்கள் அந்த அறைக்குள் சென்றதும் “பரவாயில்லை உனக்கு நெறைய விஷயங்கள் தெரியும் போல..”
“நான் எல்லாம் வேகமாக கற்றுக்கொள்வேன்” என்றேன்.
அவள் சிரித்தபடி பாடத்தை தொடர்ந்தாள்,
இந்த ட்ரைனிக் நான் 4 நாட்களில் முடித்தேன், முடித்து நான் ப்ராஜெக்ட் எடுத்து வேகமாக செய்ய எல்லாரிடமும் நான் நற்பெயரை எடுத்தேன். அதோடு எனக்கும் ஆர்த்திக்கு பேச்சு குறைந்தது. அங்கே ஆண்களே ஒருவருக்கொருவர் பேச யோசிக்கும்போது ஆண்கள் பெண்களிடம், ம்ம்ம்ம் ம்ம்ம்ம் சொல்லவா வேண்டும். அவர்கள் இருக்கும் பக்கம் தலை கூட வைத்து படுக்கமாட்டார்கள்.
ஒரு வாரம் முடிந்து நான் என் இருக்கையில் அமர்ந்து என் வேலையை ஆரம்பித்த அன்று, எனக்கும் என் அருகில் இருப்பவருக்கும் ஒரே வேலையை வேறு வேறு கோணத்தில் செய்ய சொன்னார்கள், நான் முடித்து வைத்து விட்டு போக அவர் முடிக்காமல் போனதால் அடுத்த நாளே அவரை வேளையில் இருந்து தூக்கினார்கள், அப்படி என்றாள் பார்த்துக்கொள்ளுங்கள் எப்படி என் அலுவளுகம் என்று.
அவர்கள் இருவரும் இல்லை என்றாள் நாங்கள் சத்தம்போடாமல் பேசுவோம், அதுவும் நான் அமர்ந்திருந்த இடம் கடைசி இடம் என்பதால் என்னோடு பேசுவதற்கு ஆள் இல்லை, அப்படி இருக்கையில் இரண்டு வாரம் கழித்து ஆர்த்தி எனக்கு அருகே இருக்கும் இடத்திற்க்கு மாறினாள், அந்த கியூபிக்கில் 4 பேர் அமர இயலும், ஆனால் இருவர் மட்டும் அமர்ந்தோம், காரணம் எங்கள் பின்னால் பழுது அடைந்த கணினி இருக்கிறது, மற்றும் இரண்டு எக்ஸ்ட்ரா கணினி.
எங்கள் இடம் கடைசியில் இருப்பதால் யாருக்கும் நாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாது எங்கள் சார் மட்டும் பார்க்க முடியும். இவள் மேடம் கீழே வேலை செய்கிறாள், நான் சார் கீழே என்பதால் எங்கள் பேச்சு பெரும்பாலும் பொதுவான விஷயங்களை பற்றியோ இருக்கும்.
இவளை இங்கே மாற்றியதற்கு காரணம் இருவரின் வேலையும் கலந்தது போல ஒரு ப்ராஜெக்ட் வர, நாங்கள் சேர்ந்து செய்யவேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு. அதுவும் இல்லாமல் சில மாதங்கள் முன்னாள் குழந்தை பெற்றுக்கொள்ள போனவள் திரும்ப வந்ததாள் அவள் இடத்தில் தான் ஆர்த்தி அமர்ந்திருந்தாள் இப்போது அவள் மறுபடியும் பணியில் சேர்வதால் இந்த இடமாற்றம்.
இதனால் நாங்கள் கொஞ்சம் தாராளமாக பேச முடிந்தது, அவ்வப்போது அவள் தொடைகளை சைடில் அவள் மாங்கனிகளை ரசிக்க முடிந்தது. அவளும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் பற்றி பேச ஒரு நாள் மாலை வெகு நேரம் வேலை செய்யவேண்டியது வந்தது.
அன்று அனைவரும் போன பிறகும் நான் ஆர்த்தி மற்றும் மேடம் மட்டும் இருந்து வேலைகளை செய்து முடித்தோம். மேடம் போவதற்குமுன் எங்களிடம் ஆபீஸ் பூட்டிவிட்டு சாவியை வீட்டின் ஜன்னலின்வழியே போட்டுவிட்டு போக சொன்னார்கள்.
ஆபீஸ் அவர்கள் வீட்டின் முன்னே இருக்கும், எங்கே வைக்கணும் என்று ஆர்த்திக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு போக, ஆர்த்தி வந்ததும் அவளிடம் மேடம் சொன்னதை சொல்ல,
“அப்பாடா மேடம் போயாச்சா” என்று சந்தோஷப்பட்டாள்.
பின் அவள் கல்யாணவீட்டிற்கு போகணும் என்று என்னிடம் மறுபடியும் சொல்ல, நான் எங்கே என்று கேட்டேன்.
“உங்க ஏரியால” என்றாள்.
அவள் சத்திரம் பெயர் சொல்ல, அதன் அருகே தான் வீடு இருக்கிறது.
“எப்படி போவீங்க?”
“ட்ரெயின் அப்புறம் ஆட்டோ” என்றாள்.
“என் கூட வாங்க நான் இறக்கிவிடுறேன்” என்றேன்.
“உங்களுக்கு பிரச்னை இல்லையா?”
“அட வீட்டுக்கு போற வழிதான், வாங்க” என்று சொல்ல கொஞ்சம் தயங்கியவள் பின் அவள் அம்மாவிற்கு போன் செய்து வர கொஞ்சம் நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டு ஆபீஸ் விளக்குகளை அணைக்க, இருவரும் பூட்டி விட்டு, சாவியை அவள் எடுத்து சென்று மேடம் வீட்டின் ஜன்னலில் வைத்துவிட்டு வந்தால், நான் அதற்குள் வண்டியை எடுத்து தயாராக அவளுக்காக காத்திருந்தேன்.
“புது வண்டி போல?”
“ஆமாம் வாங்கி ஒரு மாதம் தான் ஆகிறது” என்றேன்.
அவள் ஒரு பக்கமாக கால்களை போட்டு அமர, நான் வண்டியை எடுத்தேன். வழியெங்கும் பேசியபடி வந்தால், கொஞ்ச தூரம் போனதும் அதிகமாக டிராபிக் ஆகா அவள் இறங்கி இரண்டுபக்கம் கால் போட்டு அமர்ந்து என்னை நெருங்கி அமர்ந்து பேசியபடி வந்தால். அப்போது அவள் மார்பு என் முதுகில் அழுத்தியபடி இருக்க நான் அந்த சுகத்தை அனுபவித்தபடி வண்டியை ஓட்டினேன்.
அவள் எனக்கு காதலியை பற்றி கேட்க, கல்லூரி முடிந்தபோது அதுவும் முடிவுக்கு வந்தது என்றேன்.
“அப்போ எல்லாம் ஓவர் ஆஹ்” என்று கேட்டால்.
“இல்லை அதுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.”
“கிடைச்சிருந்த..”
“ரெண்டு பேரும் கல்யாணம் செய்யலாம்னு இருந்தோம், ஆனா அவங்க வீட்ல ஒற்றுக்கொள்ள வில்லை, அதனால பிரிஞ்சிட்டோம்” என்றேன்,
“நான் கேட்டதுக்கு பதில் வரல” என்றால்.
“இல்லை கல்யாணத்துக்கு அப்புறம் தான் செய்யணும்னு இருந்தோம் அதனால எல்லை மீறலை, ஆனா மற்றது எல்லாம் நடந்தது” என்றேன்.
“ஒஹ்ஹஹ் என்று என் தோளில் தட்டினால்.” அவளுக்கு காதலரகள் இருக்கிறார்களே என்று கேட்க, இல்லை என்றும் அதற்கு வாய்ப்பு அமையவில்லை என்றும் கூறினால்.
இப்படியே பேசியபடி போக நாங்கள் போக வேண்டிய இடம் வந்தது, அவள் முன்னரே இறங்க, அவள் இறங்கி.
“காலைல எத்தனை மணிக்கு வேலைக்கு போவ?”
“இங்கே இருந்து 8, 8:30க்கு கிளம்புவேன்”
“நானும் வரேன்” என்றால்
“சரி, எத்தனை மணிக்கு வர?”
“உன் போன் நம்பர் குடு நான் அழைக்கிறேன்” என்றால்.
இருவரும் எண்ணை பரிமாறிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
இரவு 11 மணிக்கு அவள் குட் நைட் மெசேஜ் அனுப்பினால், நானும் பதிலுக்கு அனுப்ப, கொஞ்ச நேரம் இருவரும் கல்யாணவீட்டில் நடந்ததை பற்றி பேசினோம்.
பின் காலை சந்திப்போம் என்று இரவு வணக்கம் சொல்லி போனை வைக்க நேரம் 1 ஆகியிருந்தது.
அடுத்த நாள் காலை அவள் என்னை சீக்கிரம் போகலாம் என்று சொன்னதால் நானும் 7:30 மணிக்கு அவள் சொன்ன இடத்தில் சென்று காத்திருந்தேன்.
அவள் ஒரு மஞ்சள் நிற புடவையில் வந்து என் வண்டியில் ஏறினாள்..
தொடரும்…
コメント