சித்தி மகள்
- Nanda Kumar
- Dec 4, 2023
- 1 min read

சித்தி மகள்
“டேய் நந்தா சீக்கிரம் வா சித்ரா வீட்டுக்கு போகணும்..” என்று அம்மா என்னை எழுப்ப நான் இரவு வேலை செய்து அப்போது தான் வந்து தூங்கினேன், எழுந்திருக்க முடியாமல் எழுந்து அவளை அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.
சித்ரா என்பது என் அம்மாவின் தங்கை, அவளும் சித்தப்பா, ஜனனி அனைவரும் எங்கள் வீட்டின் அருகே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கிறார்கள்.
சித்தப்பா அரசாங்க ஊழியர், சித்தி அருகே இருக்கும் ஒரு நிறுவனத்தில் பெரிய மேனேஜர் வேலையில் இருக்கிறார்கள். ஜனனி என்பது என் சித்தியின் மகள், அவள் ஒரு வெளிநாட்டில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டே அங்கையே வேலை செய்கிறாள். இன்று என்ன சண்டையோ சித்தப்பா சித்திக்கு என்று எண்ணியபடி எதுவும் கேட்காமல் வண்டியை ஓட்டினேன்.
வீட்டை அடைந்ததும் அங்கே பெரிய கூட்டமே கூடியிருந்தது, எல்லாரும் சித்தி வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், மற்றும் எங்கள் மாமா அத்தை என்று அனைவரும் வந்திருந்தார்கள்.
அப்போது தான் தெரிந்தது என் சித்தி மகள் அங்கே யாரையோ கல்யாணம் (வெள்ளைக்காரன்) செய்துகொண்டாள் என்று. சித்தப்பா சித்தி இடிந்து போய் உட்கார்ந்து இருந்தார்கள்.
நக்கல் பேச்சும், சமாதான பேச்சும் அழுகையும் சிரிப்பும்…
—----------------------------------------------------
கிட்டதட்ட 15 வருடம் கழித்து எங்கள் பெரியப்பா சாவிற்கு ஜனனி வந்திருந்தாள். குழந்தை கணவர் இல்லாமல் தனியாக வந்திருந்தாள்.
யாரும் அவளிடம் சென்று பேசவில்லை, அவளை உள்ளே கூட அழைக்கவில்லை, வெளியேவே நின்றிருந்தாள், நான் அவளை கவனிக்காமல் உள்ளே சென்று வெளியே வர, “டேய் நந்தா..” என்று அந்த என்னை அழைக்க அப்போது தான் கவனித்தேன்.
நான் அவளை பார்த்த சந்தோஷத்தில் அவள் அருகே செல்ல, “அக்கா..” என்று அழைத்ததும் அவள் என்னை கட்டிபிடித்து அழுக ஆரம்பித்தாள்.
எனக்கும் பல வருடங்கள் கழித்து அவளை சந்தித்த சந்தோசம் இறுக்கமாக அணைத்துக்கொள்ள, இருவரும் நின்றபடி பெரியப்பா என்று அவரை இழந்த துக்கத்திலும் அவளை மறுபடியும் சந்தித்த ஆசையில் அழுக அவளும் அதிகமா அழுதாள்.
“நந்தா என்னை பாக்க.. விடமாற்றங்க..” என்று சொல்ல ஐயோ என்னடா இது என்று அவளை பார்க்க அவள் இன்னும் தேங்கி தேங்கி அழுதாள்.
“நீ வா ஜானு..” என்று அவள் கையை பிடித்து உள்ளே அழைத்த சென்றேன். அங்கிருந்தார்கள் அதிர்ச்சியாக என்னை பார்த்தார்கள்.
“டேய் நந்தா என்ன பண்ற..” என்று என்னை தடுத்த அத்தையை மீறி உள்ளே அழைத்து சென்றேன்.
Comments