top of page

Cyber Theft Part 1

  • Writer: Maaya
    Maaya
  • Jan 19
  • 6 min read

Cyber Theft Part 1


இது கதை அல்ல நிஜம்…


—-------------------------------------------------------------



மணி சரியாக 5:30 தொட, “...இதோடு மீட்டிங் முடித்துக் கொள்வோம்..” என்று மேனேஜர் சொன்னதும் அனைவருக்கும் பை சொல்லிவிட்டு அப்பாடா என்று நான் காதில் மாட்டியிருந்த ஹெட்போனை கழட்டி வைத்துவிட்டு என் கணினி மவுஸை எடுத்து கை கடிகாரம் மீது வைத்தேன், அப்போது தான் கணினி “அவே” என்று காட்டாது மற்றவர்களுக்கு, சில நிமிடம் கணினியை இயக்காமல் விட்டால் அது “அவே” என்று காட்டும், அவ்வாறு காட்டாமல் இருக்க இவ்வாறு செய்யலாம். 


கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துவிட்டு வந்து மறுபடியும் வேலை பார்க்கலாம் என்று எழுந்து முதலில் பாத்ரூம் சென்றேன், ஒன்றரை மணி நேரம் மேல் சென்ற இந்த மீட்டிங்கால் எனக்கு பாத்ரூம் கூட போக முடியாமல் மிகவும் கஷ்டமாக இருந்தது.


வெளியே வந்த நான் கிச்சன் சென்று தண்ணீர் குடிக்க கிச்சேன் போகும்போது என் போன் பாக்கெட்டில் சிணுங்கியது.


எடுத்து பார்த்தேன் “டெலிகிராம்” ஆப்பில் ஒரு குறுஞ்செய்தி. புது பெயர் இருந்தது, ‘யாராக இருக்கும்?’ என்று எண்ணியபடி அதை திறந்து பார்த்தேன், இந்தியில் பெயர் மற்றும் எண் இல்லாமல் வெறும் ஒரு ஹிந்தி லாகின் பெயர் இருந்து வந்தது.


செய்தி - “நாங்கள் உன் பெண்ணை கடத்தி வைத்துள்ளோம், உடனே 5 லட்சம் ரூபாய் இந்த டிஜிட்டல் ஸ்கேனுக்கு அனுப்பினாள் அவள் பிழைப்பாள் அல்லது அவளின் பிணம் தான் கிடைக்கும்..” என்று தப்பு தப்பான ஆங்கிலத்தில் வந்திருந்தது.


அதோடு அவள் கடையில் சில பொருட்களோடு நிற்பது போல் ஒரு புகைப்படம். அவள் என்ன வாங்கினாள் என்று தெளிவாக எழுதி எவ்ளோ பணம் ஆகியது முதற்கொண்டு, எங்கள் பிளாட் விவரம், என் வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள், நான் வீட்டில் இருந்தே வேலை செய்வது, எங்கே செய்கிறேன் போன்ற எல்லா தகவலும் சரியாக இருந்தது. 


அதை பார்த்ததும் என் உடல் நடுங்கியது, முகம் வேர்க்க எனக்குள் ஒரு பயம் வந்தது. முதலில் இது சரியான தகவலா என்று பார்க்க, 


“ஜென்னிபர்..” என்று என் மனைவியை அழைக்க அவள் பாட்டத்துடன் வந்தாள்.


அதற்கு காரணம், எப்போதும் ‘செல்லம், அம்மு அல்லது ஜெனி’’ என்று அழைக்கும் நான் அவள் முழு பெயரை அழைத்தால் நான் எதோ கோபமாக இருக்கிறேன் என்று அர்த்தம். 


ஓடி என் அருகே வந்தவள், “என்ன அச்சிங்க..” என்று கேட்டாள்.


“மாயா எங்கே?” என்று கேட்டேன்.


“அவளை கடைக்கு அனுப்பியிருக்கேன்.”


“எந்த கடைக்கு..” என்றேன்.


“உள்ளே இருக்குற கடைக்கு தான்..” என்றாள் குழப்பமாக, உள்ளே இருக்குற கடையா? போட்டோவில் இருக்கும் கடை உள்ளே இருக்கும் கடை இல்லையே?


“என்ன வாங்கிட்டு வர சொன்ன?”


அவள் வாங்கிய பொருட்களை சொல்ல, நான் அந்த கயவன் அனுப்பிய புகைப்படத்தை காட்ட, “ஆமா இதான், உள்ளே இருக்குற கடை மாதிரி இல்லையே?” என்று அவளும் உறுதி செய்ய.


“யாரு அனுப்பின போட்டோ இது?”


என்று கேட்டவளுக்கு எனக்கு வந்த செய்தியை காட்டினேன்.


படித்தவள் ஒரு நிமிடம் ஆடி போய் பின்னே இருந்த நாற்காலியில் தடுமாறியபடி அமர்ந்தாள்.


அவள் கண்ணில் நீர் வழிய என்னை பார்க்க எனக்கும் என்னை மீறி கண்ணில் நீர்.


‘திடிங்..’ என்று சட்டத்துடன் மறுபடியும் போன் சினுங்க. அவள் போனை பார்த்தாள், தன் விரல்களால் போனின் டிஸ்ப்ளேவில் தெரிந்த ஸ்கேனரில் அவள் விரல்களை வைத்து அழுத்த போன் திறந்து விட்டது, அவள் போனில் விரல் வைக்க, ஒரு ஆடியோ ஓடியது.


“என்ன சாப்.. உங்க வைப் கிட்ட கேட்டுச்சு.. இப்போ உங்க பொண்ணு எங்க ரூம்ல இருக்கு. நீங்கோ காசு அனுப்பலான அவளை கெடுத்து தூக்கி போடும்… போலீஸ் கிட்ட போன அவ்ளோதான் டெட் பாடி தான்.. உன் கிட்ட பைவ் லக்ஸ் இருக்குன்னு தெரியும், உடனே அனுப்பு. அந்த ஸ்கேனர்ல அனுப்பு அதுல அனுப்ப முடியலன்னு சொல்லாத இன்னொரு ஸ்கேனர் அனுப்பியிருக்கேன் அதுல பாதி இதுல பாதி அனுப்பு. போலீஸ் கிட்டையே இல்ல பிளாட் விட்டோ நீ வெளியே போக கூடாது வெளியே போனா அவ்ளோ தான் அவ காலி, உன் வீட்டை நாங்க வாட்ச் செய்யிறோம்.. சீக்கிரம் ஒன் அவர் தான் டைம்.. சம்ஜெ..” என்று சொல்லிவிட்டு போனை வைக்க.


“ஐயோ இவளை வேற எங்கையும் போகாத கடைக்கு போயிட்டு நேரா வீட்டுக்கு வர சொன்னேன், அதுவும் உள்ளே இருக்குற கடைக்கு தான் போக சொன்னேன். இவ எதுக்கு வெளியே போனா?. ஒரு வேலை சமந்தா வீட்டுக்கு போனாலோ..” என்று அவள் போனை எடுத்து “அவ வீட்டுக்கு போகணும்னு சொன்ன” என்று சொல்லியபடி அழைக்க அவள் மறுமுனையில் பேசினாள்.


“சொல்லுங்க ஆன்ட்டி..”


“ஹலோ, மாயா அங்கே இருக்காளா?” என்று கேட்க.


“ஆண்ட்டி நான் வீட்ல இல்ல வெளியே டியூஷன் போயிருக்கேன் இன்னிக்கி தான் சேர்ந்தேன். நான் அம்மா கிட்ட போன் செஞ்சி கேட்டு சொல்லவா?” என்று கேட்க 


“வேணாமா நான் அம்மாகிட்ட போன் பண்ணி பேசிக்குறேன்..” என்றாள்.


அடுத்து அவள் அம்மாவை அழைக்க. அவள் வீட்டிற்கு வரவில்லை என்று கூறினாள்.


இருவருக்கும் பயம் வந்துவிட்டது. 


என்ன செய்வது என்று குழப்பத்துடன் யோசிக்க மறுபடியும் அதே ஆடியோ பைலை ஓட விட்டாள். அப்போது சட்டென்று எனக்கு ஒரு விடயம் நியாபகம் வர, அவளிடம் இருந்து போனை வாங்கி சில நொடி பின்னே சென்று ஓட விட்டேன்.


பின் அவனுக்கு மெசேஜ் அனுப்பினேன். 


‘ப்ளீஸ் எதுவும் செய்யாத நான் சீக்கிரம் பணம் ஏற்பாடு செய்கிறேன்’ என்று.


“நீ இவன் கிட்ட மெசேஜ் பண்ணு, வேற அக்கவுண்டில் பணம் இருக்கு எடுக்க ட்ரை பண்றேன் ஓபன் ஆகல நேரம் எடுக்குது, அப்படி இப்படின்னு அனுப்பிட்டு இரு, நான் பேசுற மாதிரி பேசு.. நான் போய் பாக்குறேன்..” என்றேன்.


“நீங்க எங்கே போறீங்க?” வெளியே போக முயன்ற என் கைகளை பிடித்து கேட்க.


“பாப்பாவை கூட்டிட்டு வரேன்.. நம்பு… என் டைம் வேஸ்ட் பண்ணாத..” என்று சொல்ல அவள் என் கண்களையே பார்த்தாள். என் கைகளை விட நான் என் போனை வாங்கி ஒரு செயலியை ஆன் செய்துவிட்டு எல்லா மெசேஜ் ஒரு ஸ்னாப் எடுத்தேன் பின் அவள் கையில் இருந்த அவள் போனை வாங்கி கொண்டு வேகமாக கதவை திறந்தேன், மெல்ல வெளியே எட்டி பார்த்தேன், காரிடாரில் யாரும் இல்லை. மெதுவாக சென்று லிப்ட் இருக்கும் பக்கம் எட்டி பார்த்தேன், அங்கே யாரும் இல்லை, சுற்றும் முற்றும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு வேகமாக மாடிக்கு சென்றேன்.


நாங்கள் இருப்பது அடுக்கு மாடி குடியிருப்பு, மொத்தம் மூன்று பிளாக், ஒன்றோடு ஒன்று சேராமல் தனித் தனியே இருக்கும், ஆனால் மாடியில் மட்டும் ஒரு இரும்பு பாதை ஒன்று மூன்று பிளாக் இடையே இருக்கும், அதை சர்வீஸ் செய்யும் நபர்கள் தவிர வேறு யாரும் அதை பயன்படுத்த முடியாது, அந்த இரும்பு பாலம் தொடங்கும் இடத்தில் இரும்பு கதவு இருக்கும் அதை திறக்கும் வித்தை எனக்கும் சிலருக்கும் மட்டுமே தெரியும்.


இவர்கள் எங்களை கண்காணிக்கிறார்கள் என்றால் நிச்சயம் நான் எங்கள் பிளாக் லிப்ட் வழியே தான் வருவேன் என்று அங்கே தான் நிற்பார்கள், அதனால் தான் இவ்வாறு சென்று மூன்றாவது பிளாக் சென்றேன் பின் படி வழியாக வேகமாக சென்றேன். கீழே தரை தளம் செல்லாமல் முதல் மாடியில் என் நண்பனின் வீட்டிற்கு சென்றேன், அங்கே அவன் மனைவி வீட்டு வேலை செய்து கொண்டு இருந்தாள்.


“என்ன ஆச்சு அண்ணா?” என்று கேட்டவளிடம் எதுவும் சொல்லாமல் வேகமாக உள்ளே சென்றேன், அவன் கட்டிலறை வழியாக பால்கனிக்கு சென்று இரும்பு கதவை திறந்து கீழே குதித்தேன்.


அவள் என்ன ஆச்சு என்று கேட்டு பின்னே வர, நான் பதில் சொல்லாமல் வேகமாக எதிர் பக்கமாக சென்று எங்கள் காம்பௌண்ட் சுவற்றை தாண்டி அருகே சென்ற பாதையில் சென்றேன்.


நான் இந்த பாதையில் செல்ல காரணம், இங்கே இருக்கும் கார் பார்க்கிங், மற்றும் வண்டி பாதையில் கேமரா இருக்காது. 


இப்பாதை வழியே செல்ல காரணம், இது வழியே சென்றாள் அவள் சென்ற கடையின் பின்னே சென்று அதை தாண்டி இருக்கும் தெருவை அடையாளம்.


அதனால் நான் அவ்வாறு சென்றேன். வேகமாக ஓடி சென்று மெயின் ரோட்டை அடைந்த நான் அங்கே என் பெண் இன்னொரு பெண்ணோடு பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தேன்.


“அப்பாடா..” என்று எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகா, அவள் சரியாக என்னை பார்த்தாள். என் விரலை உதட்டில் வைத்து அமைதியாக இரு என்றேன்.


அவளோடு பேசிக்கொண்டே இருந்த பெண் திரும்பி பார்க்க நான் ஒளிந்து கொண்டேன். சில நொடிகள் கழித்து மெல்ல எட்டி பார்க்க அவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள், அந்த இன்னொரு பெண் இவளை அழைக்க இவள் போகாமல் நின்றாள், கை பிடித்து இழுத்தும் அவள் போகவில்லை.


மெல்ல அவளை கை காட்டி அழைக்க, அவள் ஏதோ அவளிடம் சொல்லிவிட்டு வர, அவள் போனில் யாரிடமோ பேச அப்போது சீருடை

 போட்ட ஒரு ஆண் வந்து என் பெண்ணை அழைக்க அவள் அவனை கவனிக்காமல் என்னை நோக்கி வர, நான் மறைந்து கொண்டேன்.


“என்ன அப்பா இங்கே நிக்குறீங்க?” என்று கேட்டாள். நான் அவளை பிடித்து வெளியே வர அந்த பெண்ணும் ஆணும் ஒரு நிமிடம் குழம்பி போனார்கள், எங்களை நோக்கி நடந்து வந்து கொண்டு இருத்தவர்கள் அப்படியே நிற்க.


“ஏன் இவ்ளோ நேரம்..” என்று அவளை கேட்டபடி அவர்களை பார்க்க, அவன் போனில், இருவரின் காதில் போன் இருந்தது, எதோ பேச சட்டென்று பின்னே திரும்பி வேகமாக நடந்து சென்றார்கள்.


நான் அவளை அழைத்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு சென்றேன், அவள் என்னிடம் வழக்கம் போல பேசிக்கொண்டே வந்தாள்.


அப்போது என் மனைவி அழைத்து, “ என்னங்க அவங்க மெசேஜ் ஸ்டாப் ஆயிடுச்சி, அந்த மெசேஜ் காணோம்..” என்றாள்.


“பயப்படாத நான் பாப்பாவை பார்த்து விட்டேன் வீட்டுக்கு தான் அவளை கூட்டிட்டு வரேன்..” என்றேன்.


“என்னங்க சொல்றிங்க?” என்று கேட்டாள்.


“இதன் திகில் அரெஸ்ட்..” நேர்ல வந்து சொல்றேன் எல்லாம்..


என்று சொல்லிவிட்டு அவளை வீட்டிற்கு அழைத்து சென்றேன்.


வாசலில் எப்போதும் இரவில் நிற்கும் காவலாளி என்னை பார்த்தும் பார்க்காதது போல் சென்றான். நான் லிஃப்டை அடையும்போதே என் மனைவி கீழே வந்துவிட்டாள்.


அவள் நேராக வந்து மாயாவை அணைத்துக்கொள்ள மாயா என்ன நடந்தது என்று புரியாமல் குழம்பிப்போனாள்.


“மேலே கூட்டிட்டு போ..” 


“எப்படி என்ன ஆச்சி எனக்கும் ஒன்னும் புரியல” என்றாள்.


என் போனை வாங்கி கொண்டு அவளை மேலே அனுப்பினேன்.


நல்ல வேலை நான் ஆன் செய்து வைத்த ஸ்க்ரீன் ரெகார்டர் இன்னும் ஓடி கொண்டு இருந்தது.


அதை நிறுத்திவிட்டு முதலில் இருந்து ஓட விட, அவன் மெசேஜ் செய்தது என் மனைவி கெஞ்சியது எல்லாம் பதிவாகியிருந்தது.


அவள் சொன்னது போல அவன் டெலிகிராமில் அனுப்பியது டெலீட் ஆகியிருந்தது.


அப்போது எங்கள் அஸோஸியேட் தலைவர் வர, அவரிடம் நடந்ததை கூறி அந்த வீடியோவை காட்ட அவர் அதை பார்த்துக்கொண்டு இருக்கும் போது பக்கத்து பிளாக்கில் இருக்கும் ஒருவர் வந்து நாங்கள் பேசுவதை கேட்டார். 


“சார் போன வாரம் தான் எங்க பிளாக்ல ஒரு பாமிலிக்கு இப்படி ஆச்சு.. அவங்க கிட்ட அவங்க 10 லட்சம் மேல தந்த அப்புறம் தான் அவங்க பையன் வீட்டுக்கு வந்தான்….”


“இது ஏன் எங்க கிட்ட சொல்லல?” என்று அஸோஸியேட் தலைவர் கேட்க.


“சார் இது பர்சனல் ப்ரோப்லேம், அதான் அவங்க நம்ம கிட்ட சொல்லல..”


“இல்ல சார் இது பர்சனல் இல்ல, இது காமன் ப்ரோப்லேம், இது டிஜிட்டல் அர்ரெஸ்ட்னு சொல்லுவாங்க. இதே மாதிரி தான் என்னையும் செஞ்சாங்க பட் ஒரு தப்பு பண்ணதால நான் நிலவரம் புரிஞ்சு வெளியே போய் என் பொண்ணை காப்பாத்தி கூட்டிட்டு வந்தேன்.” என்று நடந்ததை கூறினேன்.


நான் எப்படி இது பொய் என்று கண்டுபிடித்தேன் என்றாள்.


  1. புகைப்படம் கடையில் தான் எடுக்கப்பட்டது, ஆனால் அவன் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதில் என் பெண் அவனோடு அறையில் இருப்பதாக கூறினான்.

  2. எனக்கு காசு வந்த விஷயம் நான் நேற்று அந்த பணத்தை எடுத்து வரும்போது போனில் பேசிக்கொண்டு வருவதை எங்கள் பிளாட் வாட்ச்மேன் பார்த்தான், அதோடு என் வீட்டு வேலைக்காரி நாங்கள் பேசும்போது அங்கே இருந்தாள், அவள் இருப்பதை பார்த்து என் மனைவி கண் காட்டி பேச வேணாம் அப்புறம் பேசுவோம் என்று கூறியது ஞாபகம் வந்தது.

  3. எப்போதும் வெளியே போனாள் என் பெண் விளையாடிவிட்டு அல்லது எங்கையாவது போயிட்டு நேரம் கடந்து தான் வருவாள், ஆனால் வெளியே ரோட்டில் அதிக நேரம் சுற்ற மாட்டாள், காரணம் அவளிடம் இருக்கும் ஒரு பயம்.


இதே போன்று நடந்த ஒரு செய்தி பற்றி சமீபத்தில் தான் நான் படித்தேன் அதனால் தான் நான் சுதாரித்துக்கொண்டு முதலில் கடைக்கு சென்று பார்ப்பது என்று அவ்வாறு வெளியேறினேன்.


என் பெண்ணோடு பேசிக்கொண்டு இருந்தது வேறு யாரும் இல்லை, எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் தான். அதோடு அவளிடம் வந்து பேசியது அவள் கணவன், அவனும் தான் இங்கே வேலை செய்கிறான்.


அவர்கள் என் பெண்ணிடம் பேசிக்கொண்டு அவளை எங்கையும் போகவிடாமல் அங்கையே நிற்க வைத்து, பின் எங்களை மிரட்டி அதுவும் வீட்டை விட்டு வெளியே வராதபடி செய்து பணம் பறிக்க திட்டமிட்டார்கள். கீழே வந்திருந்தாள் இந்த வாட்ச்மேன் என்னை பார்த்து அலெர்ட் செய்திருப்பான், நான் வேறு வழியாக சென்றதால் தான் இவளை காப்பாற்ற முடிந்தது.


இதை அவர்களிடம் சொன்னதும், அவர்களும் நாங்களும் வேகமாக செயலில் இறங்கினோம், அந்த மூவரையும் பிடித்து கட்டிப்போட்டு விசாரிக்க அங்கே வேலை செய்யும் அவர்களின் கூட்டாளிகளை பற்றி சொல்ல அவர்களையும் நாங்கள் பிடித்தோம், பின் போலீசிடம் சொல்ல அவர்கள் வந்து அவர்களை கைது செய்தார்கள், அவர்களிடம் இருந்து போனில் எனக்கு வந்த புகைப்படம் மேலும் அவர்கள் மற்றவர்களிடம் பேசியது வீடியோ, மற்றும் பணம் பரிவற்றனைக்கான மெசேஜ் எல்லாம் இருந்தது.


பின் அங்கே விசாரித்ததில் எங்கள் பிளாட்டில் மட்டுமே 5 குடும்பம் இது போல மாட்டியிருக்கிறார்கள்.


அவர்களிடம் விசாரித்த போலீஸ் பின் என்னை அழைத்தார்கள்.


“என்ன சார், பெரிய ஜேம்ஸ் பாண்ட்டா நீங்க.. நீங்களே எல்லாம் பண்ணிட்டா அப்புறம் நாங்க எதுக்கு?”


“இல்ல சார், அவங்க போலீஸ் கால் பண்ண கூடாதுன்னு சொன்னாங்க, ப்ளஸ் எனக்கு ஒரு சின்ன டவுட் அது கிளியர் பண்ண தான் போனேன், இது போல ஏற்கனவே நடந்து பற்றி நான் படிச்சேன், சோ அந்த டௌட் க்ளியர் பண்ண கடைக்கு போனேன், அங்கே போன என் பொண்ணு அங்கே அந்த பொம்பளை கூட பேசிட்டு இருந்தா அதான் காப்பாத்திட்டேன்.” என்றேன்.


பின் அவர் அவர்களை பற்றி விவரமாக கூறினார்.


“இது அவங்களுக்கு பிரஸ்ட் டைம் இல்ல, அதோடு இங்க மட்டும் இல்ல இங்கே சுத்தி இருக்குற அபார்ட்மெண்ட் வீட்ல இருக்கிறவங்க கிட்ட கை வரிசை காட்டியிருக்காங்க, சிலர் கிட்ட கேஸ் சிலர் கிட்ட டிஜிட்டல் பேமென்ட். இவங்க செய்யிறது எல்லாம் சிம்பிள், வீட்ல இருக்குற பசங்கள வாட்ச் பண்றது, அவங்க பேமிலி பற்றி விசாரிக்கிறது அவங்களை பாலோவ் பண்றது. மோஸ்டா பசங்க கீழே இல்ல வெளியே விளையாட போன, உடனே வீட்டுக்கு போக மாட்டாங்க, சொல்ற இடம் ஒன்னு போற இடம் வேறொன்னு, அத இவங்க யூஸ் பண்ணிக்குறாங்க.”


“உங்களுக்கு நடந்த மாதிரி தான் வீட்ல வேலை செய்யிற மெய்ட் இல்லாட்டி வாட்ச்மேன் யாராவது பேசிக்கிட்டே இருப்பாங்க, அதே டைம் இங்கே சிலர் அவங்கள வாட்ச் பண்ணிட்டு, அதே நேரம் மெசேஜ் செஞ்சி உங்களை மிரட்டுவாங்க. உங்க கிட்ட இருக்குற காசு வந்ததும் பசங்கள வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. ரிஸ்க் கம்மி அதே நேரம் ஈசி வேலை. உங்களை மெசேஜ் பண்ணி மிரட்டி வீட்ல வைக்கிறது பேரு தான் டிஜிட்டல் அர்ரெஸ்ட்..”


என்று சொல்லி முடித்தார்.


“இதுல இன்னொரு ரகமும் இருக்கு..” என்று சொல்ல..



அது அடுத்த பாகத்தில்…


Kommentare


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2035 by Parenting Blog

Powered and secured by Wix

Inga thaan namma ooru thaan

Tel: ethuku?

bottom of page