top of page

Bank Robbers - வங்கி கொள்ளையர்கள்

  • Writer: Nanda Kumar
    Nanda Kumar
  • Dec 8, 2023
  • 4 min read

வங்கி கொள்ளையர்கள் 0


இதற்கு மேல் வேறு வழியில்லை, ‘என் கணவர் இங்கே வருவது கடினம் அதோடு இப்போ எங்கே இருந்து பணம் புரட்டுவது எல்லாம் என் தலை எழுத்து’ என்று மனதில் பொங்கியபடி கண்ணில் வழிந்த நீரை துடைத்துவிட்டு கொஞ்சமாக மேக்கப் போட ஆரம்பித்தாள் இன்பவள்ளி.


அப்போது அவள் போன் அடிக்க இவள் எழுந்து சென்று எடுப்பதற்குள் போன் கட் ஆகிவிட்டது, அந்த கயவன் தான் அழைக்கிறான்.


என்ன செய்வது என்று யோசித்தாள், கைகள் நடுங்க உடல் வேர்க்க அவள் திரும்ப அந்த என்னை அழைத்தாள். “இந்த முழுநாடும் கொரோனா வைரஸ் அல்லது…” என்று ஆரம்பிக்க இவள் பொறுமையாக காதில் வைத்து கேட்டபடி நின்றாள். கொஞ்ச நேரத்தில் அவன் பேசினான், “ஹெலோ என்ன ரெடியா?”


நடுங்கும் குரலில், “ம்ம்” என்றாள்.


“இன்னும் கால்மணி நேரத்தில் அங்கே இருப்பேன், நீ சொன்ன மாதிரியே உள்ளே வரேன்” என்று சொல்லிவிட்டு, “இப்போ எப்படி இருக்கான்னு பாக்கணும் டக்குனு ஒரு போட்டோ அனுப்பு” என்றாள்.


“அதான் இங்கே வரப்போறிங்களா அப்புறம் எதுக்கு போட்டோ?”


“சொல்றத செய்.” அவன் கொஞ்சம் கோவமாக சொல்ல,


“சரி” என்று போனை வைத்தாள்.


பின் டெலிக்ராம் ஆப் திறந்து அதில் ஒரு போட்டோ எடுத்து டைமர் செட் செய்து அனுப்பினாள்.


அனுப்பிய உடன் அவன் பார்த்ததற்கு மெசேஜ் வந்து பத்து நொடியில் அழிந்தது.


‘புடவை அவிழ்த்து ஜாக்கெட் எடுத்து அனுப்பு’ என்று மெசேஜ் வந்தது அவள் அதையே பார்க்க பத்து நொடியில் அது அழிந்தது பின் அவன் டைமரை இருவது நொடிகள் என்று மாற்றினான்.


இவள் மனதில் பொங்கிவந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அவன் கேட்டது போல எடுத்து அனுப்பினாள். இது வரை தன் கணவர் மட்டும் பார்த்த கோலத்தை, இந்த கயவன் பார்க்க அனுப்புவதை எண்ணி அவள் மனம் குமுறியது. பதில் கூட பார்க்க விருப்பம் இல்லாமல் சென்று சோபாவில் அமர்ந்தாள்.


சோ எதற்கு தான் இப்படி லாக்டௌன் போட்டு மற்றவர் வேலையை பறித்து இப்போ நடுத்தெருவில் நிற்க வைத்தார்களோ, இதற்கு நோய் வந்தே சாகலாம்.


என் போனில் தொடர்ந்து மெசேஜ் வர நான் படிக்க விருப்பம் இல்லாமல் அப்படியே அமர்ந்தேன் என் விதியை நினைத்தபடி.


எங்களுக்கு கல்யாணம் ஆகி 8 வருடம் ஆகிறது, ஒரு பையன் [இப்போ என் அம்மா வீட்டில் இருக்கிறான்] நாங்க இருப்பது சொந்த வீடு, அதற்கு வங்கியில் லோன் வாங்கி அதற்கு வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறோம், இதனால் வந்த பிரச்னை தான் இது. என்னவர் அப்போதே சொன்னார் இங்கே சொந்த வீடு வேணாம், நம் ஊரில் நமது இடத்தில் இருக்கும் வீட்டை பின்னாடி விரிவாக்கி கட்டுவோம் என்று. நான் எங்கே அப்போது அவர் சொன்னதை கேட்டேன்.


இப்போது கொரோனவள் வேலை போய் வங்கிக்கு லோன் கட்ட முடியாமல் அவர்கள் எச்சலுக்கும் பேச்சுக்கும் அசிங்கப்பட்டு வேறு வழியின்றி இப்போது என்னை தர வேண்டிய நிர்பந்தம்.


ஆறு மாதம் மொரடாரியும் சொல்லி அதில் எங்களுக்கு வெறும் மூன்று மாதங்கள் தான் தந்தார்கள் அன்றிலிருந்து இன்று வரை இப்படியே பேசி சமாளித்த நாங்கள், இப்போது இரண்டு மாதமாய் மிகவும் அசிங்க பட்டோம், ஐந்து மாதமாய் வட்டி கட்ட முடியாமல் போக தினமும் ஒருத்தன் எங்கள் வீட்டின் வாசலில் வந்து கத்தி அசிங்கப்படுத்தி போவான், என் கணவர் வேறு வெளியூரில் இருக்கிறார், இன்னுமும் வேலை கிடைக்காமல் பசிக்கு எதோ வேலை செய்துகொண்டு இருக்கிறார். போன வாரம் அவர் என்றும் இல்லாத அளவு கோவப்பட்டு கத்தி அழுது போனை வைக்க இன்னும் எதுவும் சீரகவில்லை என்று மட்டும் புரிந்தது.


வங்கியில் இருந்து வந்தவன் தினமும் பேசி, வேறு வழியில்லை உன்னை வீட்டை விட்டே துரத்திவிட்டு சாவியை கொண்டு பூட்டிவிடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்தான். அவனிடம் கெஞ்சியும் எந்த ஈவுஇரக்கமும் காட்டவில்லை. கடைசியாக அவன் என்னோடு படு உன் கணவருக்கு லோன் கட்ட பணம் வரும்வரை நான் எதுவும் பிரச்னை வராமல் பார்த்துக்கொள்வேன் என்று திரும்ப திரும்ப இரவில் மெசேஜ் செய்வது, பகலில் வந்து ‘லோன் கட்ட வக்கியில்லையா’ என்று கத்துவது. போட்டோ எடுத்து எல்லா இடங்களில் போட்டு உங்களை அசிங்கப்படுத்துவோம், பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சென்று எங்களை பற்றி தரக்குறைவாக பேசுவது என்று இருந்தான்.


நான் சாப்பிட்டே பல நாள் ஆனது, என் மகனுக்காக தான் உயிரோடு இருந்தேன், இவன் மிகவும் கேவலமாக நடக்க வேறுவழியின்றி என் மகனை அழைத்துக்கொண்டு என் அம்மா வீட்டிற்கு வந்தேன், அங்கே சென்றபோது எப்படியோ விலாசம் கண்டுபிடித்து வந்து அங்கையும் அதே போல செய்ய நான் இங்கே இருப்பது நல்லது இல்லை என்று மகனை மட்டும் விட்டுவிட்டு திரும்ப என் வீட்டிற்கு வந்தேன்.


வந்து ஒரு வாரமாய் ஒரே சண்டை அசிங்கம். யாரிடமும் எதுவும் கேட்க முடியாத நிலை. ‘லோன் வாங்கின கட்டணும், வேலை போய்விட்டது என்று சொன்ன எப்படி, ஏதாவது ஏற்பாடு செய்யிங்க’ என்று உதவி கேட்க சென்ற எல்லாரும் எனக்கு திரும்ப அறிவுரை கூறினார்கள்.


பல வருடமாய் இருந்த நிறுவனத்தில் திடிரென்று ‘இப்போது கட்டிட பணி எதுவும் நடக்கவில்லை அதனால் வேலை இல்லை’ என்று என் கணவரை மார்ச் மாதத்தில் நிறுத்திவிட்டார்கள்.


இனி உயிரோடு இருந்து என்ன பயன்?


--------------------------------------------------


நான் யோசிக்கும்போதே கதவு மெல்ல தட்டும் சத்தம் கேட்டது, நான் எழுந்து போவதற்கு முன் அவன் கதவை திறந்து உள்ளே வந்தான். கூடவே இருவர்.


எனக்கு பக்கென்று இருந்தது. “யாரு இவங்க?”


“இவரு பேங்க் மேனேஜர், இவர் லோன் டிபார்ட்மென்ட் மேனேஜர்” என்று சொல்ல, அவர்கள் வெட்கமே இல்லாமல் என்னை சாப்பிடுவது போல் பார்த்தார்கள்.


“நீங்க மட்டும் தான் சொன்னிங்க?”


“அது ஒரு மாசம் ரெண்டு மாசம் தவணை கட்டலைன்னா நான் மட்டும், நீ தான் ஆறு மாசமா எதுவும் கட்டலையே அதுக்கு தான் இவங்க கலெக்ட் பண்ண வந்துருக்காங்க” என்று நக்கலாக சொல்ல.


“என்னால முடியாது நீங்க வெளியே போங்க?”


“மாட்டோம்..” என்றார்கள் மூவரும்.


“நீங்க போகலான நான் கத்தி கூச்சல் போடுவேன்” என்றேன்.


“போடு, நாங்க நீ அனுப்பின மெசேஜ் எல்லாம் வைத்திருக்கோம், அதுவும் இல்லாம இன்னிக்கி வர சொன்ன மெசேஜ் இருக்கு [வேறு போனில் இருந்து நான் மெசேஜ் செய்த போனில் வந்ததை போட்டோ எடுத்து வைத்திருந்தார்கள் அதை என்னிடம் காட்ட, நான் அதிர்ச்சியானேன்] இதை காட்டி நாங்க தப்பிப்போம், அதுவும் இல்லாம போலீசில் சொல்லிட்டு வந்துருக்கோம், நீ அமைதியா இருந்தா நாங்க மட்டும், இல்லாட்டி மொத்த போலீஸ் வந்து உன்னை அனுபவிக்கும் அதுவும் இல்லாம உன் போட்டோ சேட் எல்லாம் எடுத்து உன் புருஷனுக்கு அனுப்புவோம்” என்று சொல்ல நான் அப்போது தான் உணர்ந்தேன் மிக பெரிய இக்கட்டில் மாட்டிக்கொண்டேன் என்று.


நான் அமைதியாக இருப்பதை பார்த்து அவன் நெருங்கி வந்து என்னை அணைக்க, என்னை மீறி என் கண்ணில் நீர் வந்தது. என்னை இறுக்கி அணைத்துக்கொண்டு இருந்தவன் என் முகத்தை பார்த்து கோவப்பட்டு என்னை அறைந்தான்.


“எதுக்குடா அறைஞ்ச?” அதில் ஒருவன் கேட்க,


“இவளுங்களுக்கு இவ்ளோ தான் மரியாதை தரணும். ஏய் உன்ன என்னடி சொன்னேன், ஒரு வேசி மாதிரி இல்லாம பொண்டாட்டி மாதிரி இருக்கனும், நான் என்ன பண்ணாலும் அழுகாம சந்தோசமா செய்யணும், உனக்கு ஈஎம்ஐ பிரச்னை வரக்கூடாதுன்னா சொல்றத செய்” என்று என் தலைமுடியை பிடித்து ஆட்டினான்.


நான் கஷ்டப்பட்டு அழுகையை கட்டுப்படுத்தினேன். அப்போது இன்னொருவன் வந்து என்னை வலுக்கட்டாயமாக இழுத்து முத்தமிட்டு என் ஆடைகளை அவிழ்த்தான். பிறகு மூவரும் அடுத்தநாள் காலைவரை என்னை பலவந்தமாக கெடுத்தார்கள். அதோடு நிறுத்தாமல் அவர்கள் நண்பர்களையும் வரச்சொல்லி என்னை விருந்தாக்கினார்கள். நான் எதிர்த்தும் என்னை போட்டோ காட்டி என்னை மிரட்டி அவர்கள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டார்கள்.


இதையெல்லாம் கடிதமாக எழுதிவைத்துவிட்டு அங்கே இருந்த கயிற்றை பார்த்தேன்.


--------------------------------------------------------------------------------


நண்பர்களே. இந்த கொரோனா காலத்தில் பலர் வேலையிழந்து தவிக்கும் நேரத்தில் இந்த பேங்கில் வேலை செய்பவர்கள் மனிதத்தன்மையை இழந்து மிருகம்போல நடந்துகொள்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் வீட்டில் பெண்கள் இல்லையா? அவர்களுக்கு அம்மா, அக்கா தங்கை, மனைவி இல்லையா? ஏன் இப்படி வங்கி சொல்கிறது என்று மிருகத்தனமாக நடக்கிறீர்கள்?


இதற்கு உயிரோடு இருப்பதை விட உயிரை மரித்துக்கொள்வதே மேல் என்று பல குடும்பம் இப்போது அழிந்துவிட்டது. இனியாவது இந்த அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இல்லையேல் இது போல பல “இன்பவள்ளி” சாவதற்கு அவர்கள் காரணமாக இருப்பார்கள். இனியேனும் ஒரு உயிர் போகாமல் பார்த்துக்கொள்வது எல்லாரின் கடமை.



Recent Posts

See All

コメント


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2035 by Parenting Blog

Powered and secured by Wix

Inga thaan namma ooru thaan

Tel: ethuku?

bottom of page